×

தமிழக ஆளுநரின் உதவியாளருக்கு கொரோனா பாதிப்பு உறுதி: தன்னைத்தானே தனிமைப்படுத்திக்கொண்டார் பன்வாரிலால் புரோகித்!

சென்னை: தமிழகத்தில் கொரோனாபாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்து கொண்டே செல்கிறது. நேற்று ஒரேநாளில் தமிழகம் வந்தவர்கள் உட்பட 6,972பேர் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதன்மூலம் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 2,27,688 ஆக அதிகரித்துள்ளது. தமிழகத்தில் இதுவரை 3,571 பேர் உயிரிழந்துள்ள நிலையில், 1,62,249 பேர் குணமடைந்துள்ளனர். தற்போது வரை 54, 896 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்நிலையில், தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோகித்தின் உதவியாளர் தாமஸூக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. மேலும் மக்கள் தொடர்பு அதிகாரிகள் 2 பேர் உள்பட மொத்தம் 4 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

ஏற்கனவே ஆளுநர் மாளிகையில் உள்ள பாதுகாப்பு வீரர்கள், தீயணைப்பு வீரர்கள் உள்பட 84 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ள நிலையில்,  88 பேர் தற்போது கொரோனாவினால் பாதிக்கப்பட்டுள்ளனர். ஆளுநர் பன்வாரிலால் புரோகித் நலமாக இருப்பதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன. எனினும், ஆளுநர் மாளிகையில் 4 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளதால் ஆளுநர் தன்னைதானே தனிமைப்படுத்திக் கொண்டுள்ளார். மருத்துவர்களின் அறிவுறுத்தலை ஏற்று அடுத்த ஒருவாரம் ஆளுநர் பன்வாரிலால் புரோகித் தன்னைத் தானே தனிமைப்படுத்திக் கொண்டதாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.


Tags : Purohit ,governor ,Tamil Nadu ,Corona ,Banwarilal ,aide , Rajpavan, Assistant, Corona, Banwarilal Purohit!
× RELATED சுதந்திரப் போராட்ட வீரர்களின்...