×

தனியார் கல்வி நிறுவனங்களுக்கும் இஎஸ்ஐ சட்டம் பொருந்தும்: சென்னை உயர்நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு...!!!

சென்னை: தனியார் கல்வி நிறுவனங்களுக்கும் இஎஸ்ஐ சட்டம் பொருந்தும் என சென்னை உயர்நீதிமன்றம் அதிரடியாக தீர்ப்பு வழங்கியுள்ளது. தமிழகத்தில் உள்ள தனியார் கல்வி நிறுவனங்களில் பணிபுரியும் ஆசிரியர்கள், ஊழியர்களுக்கு  இஎஸ்ஐ சட்டம் பொருந்தும் என தமிழக அரசு 2010-ம் ஆண்டு அரசாணை வெளியிட்டது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து தனியார் கல்வி நிறுவனங்கள் சங்கம் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தனர்.

ஏற்கனவே, இது தொடர்பான வழக்கு 9 நீதிபதிகள் கொண்ட அமர்வில் உச்சநீதிமன்றத்தில் உள்ளதால், தற்போது இதனை அமல்படுத்த வேண்டாம் என உத்தரவிட்டார். ஆனால், கேரள நீதிமன்ற உத்தரவுப்படி இதனை அமல்படுத்தலாம் என  மற்ற ஒரு நீதிபதி உத்தரவிட்டார்.

எனவே, நீதிபதிகளுக்கு இடையே முரணான தீர்ப்பு உள்ளதால், வழக்கை 3 பெண் நீதிபதிகள் கொண்ட அமர்வு விசாரித்து தீர்ப்பளிக்க அப்போதைய சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி உத்தரவிட்டார். முதன்முறையாக 3 பெண் நீதிபதிகள் கொண்ட அமர்வு வழக்கினை விசாரித்த வரலாற்று முதன்முறயைாக நிகழ்ந்தது. இந்திய நீதித்துறையில் இது ஒரு சரித்திர நிகழ்வாக பார்க்கப்பட்டது. இதன்படி இந்த வழக்கு 3 பெண் நீதிபதிகள்  புஷ்பா சத்தியநாராயணன், அனிதா சமந்த், பி.டி உஷா ஆகியோர் அமர்வு விசாரணை நடத்தி வந்தது. இந்நிலையில், தனியார் கல்வி நிறுவனங்களுக்கும் இஎஸ்ஐ சட்டம் பொருந்தும் என 3 பெண் நீதிபதிகள் கொண்ட அமர்வு அதிரடியாக தீர்பளித்துள்ளது.


Tags : institutions ,ESI ,Chennai High Court , ESI law applies to private educational institutions: Chennai High Court action verdict ... !!!
× RELATED தபால் வாக்குப் பதிவு நடைமுறை தொடங்கி...