×

படப்பிடிப்புக்கு அனுமதி கோரி அமைச்சருடன் தயாரிப்பாளர்கள் சந்திப்பு

சென்னை: தமிழ் திரைப்படத் தயாரிப்பாளர்கள் பாரதிராஜா, எஸ்.ஏ.சந்திரசேகரன், கேயார், கே.ராஜன், டி.சிவா, தியாகராஜன், தனஞ்செயன் ஆகியோர் நேற்று செய்தி ஒளிபரப்புத்துறை அமைச்சர் கடம்பூர் ராஜுவை சந்தித்து பேசினார்கள். அப்போது அவர்கள் தியேட்டர்களை திறக்க வேண்டும், உள்ளூர் கேளிக்கை வரி 8 சதவிகிதத்தை நீக்க வேண்டும், டிக்கெட் கட்டணம் குறைக்க வேண்டும், சினிமா படப்பிடிப்பு தொடங்க அனுமதிக்க வேண்டும் என்பது உள்ளிட்ட பல கோரிக்கைகளை வலியுறுத்தி மனு கொடுத்தனர். அதை பெற்றுக் கொண்ட அமைச்சர் முதல்வருடன் கலந்து பேசி உரிய நடவடிக்கைகள் எடுப்பதாக கூறினார்.

Tags : Producers ,Minister , Shooting, meeting with the Minister, Producers, seeking permission
× RELATED திருச்சிற்றம்பலம் உழவர்...