×

மருத்துவமனையில் என்னுடைய துணியை நானே துவைக்கிறேன்: ம.பி. முதல்வர் சவுகான் பெருமை

மத்தியப் பிரதேச முதல்வர் சிவ்ராஜ் சிங் சவுகானுக்கு கொரோனா நோய் தொற்று உறுதி செய்யப்பட்டதால், மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றார். நேற்று முன்தினம் மருத்துவமனையில் இருந்து வீடியோ ஒன்றை வெளியிட்ட அவர், “கொரோனா நோயாளிகளின் துணிகளை வேறு யாரும் துவைக்க கொடுக்கக் கூடாது. கொடுக்கவும் முடியாது. எனவே, எனது துணிகளை நானே துவைத்துக் கொள்கிறேன். எனது கையில் அறுவை சிகிச்சை செய்யப்பட்டுள்ளது, பல பிசியோதெரபி சிகிச்சைகளுக்கு பின்னும் எனது முட்டியை மடக்க முடியாமல் இருந்தேன். தற்போது, என்னால் எனது துணிகளை துவைத்துக் கொள்ள முடிகிறது,’’ என்றார்.

Tags : Chauhan ,hospital , Hospital, my clothes, I wash myself, M.P. Chief Chauhan, proud
× RELATED ‘ஐசியு’ நோயாளிகளின் மனநலனை...