மதுரை: சாத்தான்குளம் வியாபாரிகள் ஜெயராஜ், இவரது மகன் பென்னிக்ஸ் கொலை தொடர்பான வழக்கை ஐகோர்ட் மதுரை கிளை தாமாக முன்வந்து விசாரித்தது. இந்த வழக்கு நீதிபதிகள் எம்.சத்யநாராயணன், பி.ராஜமாணிக்கம் ஆகியோர் முன் நேற்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது சிபிசிஐடி விசாரணை அறிக்கை சீலிடப்பட்ட கவரில் தாக்கல் செய்யப்பட்டது. ‘சிபிஐ தரப்பில் விசாரணை அறிக்கையை 2 வாரத்தில் தாக்கல் செய்ய நீதிபதிகள் உத்தரவிட்டனர்.