பவுலர் பந்துவீசுவதற்கு முன்பே, பந்துவீசும் முனையில் இருக்கும் பேட்ஸ்மேன் கிரீசை விட்டு வெளியில் சென்று ஓடுவதற்கு தயாராகி விடுகிறார். இது ரன் எடுக்க சாதகமாக அமைகிறது. பவுலர்களுக்கு ரன் தராமல் ‘டாட் பால்’ போடும் வாய்ப்பு பறிபோய் விடுகிறது. பந்து வீசுவதற்கு முன்பு கிரீசை விட்டு வெளியேறி சேகரிக்கும் ரன்னை கணக்கில் சேர்க்கக் கூடாது. இதற்காக புதிய விதிகளை ஐசிசி உருவாக்க வேண்டும். அதற்கு இது சரியான நேரம் என்று நினைக்கிறேன். மேலும் பேட்ஸ்மேன்கள் முன்னதாகவே கிரீசை விட்டு வெளியேறுகிறார்களா என்பதை கண்காணிக்க, உரிய தொழில்நுட்பத்தை பயன்படுத்த வேண்டும்.