×

சோனியா காந்தி தலைமையில் நாளை மறுநாள் காங். எம்பிக்கள் கூட்டம்

புதுடெல்லி: காங்கிரஸ் இடைக்காலத் தலைவர் சோனியா தலைமையில் நாளை மறுநாள் மாநிலங்களவை எம்.பி-க்கள் கூட்டம் நடைபெறுகிறது. காங்கிரஸ் தலைமையிலான மாநில அரசுகளை கவிழ்க்க பாஜக மேற்கொண்டு வரும் முயற்சிக்கு எதிராக காங்கிரஸ் கட்சி ஆன்லைன் பிரசாரத்தை கடந்த சில நாட்களுக்கு முன் தொடங்கியது. குறிப்பாக ராஜஸ்தானில் கெலாட் அரசை கவிழ்ப்பதற்காக பாஜக குதிரை பேரத்தில் ஈடுபடுவதாக காங்கிரஸ் குற்றம் சாட்டியுள்ளது. இதை கண்டித்து, காங்கிரஸ் சார்பில் நாடு முழுவதும் நேற்று போராட்டம் நடைபெற்றது.

இந்நிலையில், நாளை மறுநாள் (ஜூலை 30) காங்கிரஸ் இடைக்கால தலைவர் சோனியா காந்தி தலைமையில், காணொலி காட்சி வாயிலாக காங்கிரஸ் கட்சியின் மாநிலங்களவை எம்பி-க்களின் ஆலோசனைக் கூட்டம் நடைபெறவுள்ளது. இதில், தற்போதைய அரசியல் சூழ்நிலை மற்றும் கொரோனா தாக்கம், பொருளாதார வீழ்ச்சி, இந்திய எல்லையில் சீன ஆக்கிரமிப்பு உள்ளிட்ட விவகாரங்கள் குறித்து ஆலோசிக்கப்படவுள்ளன. ஏற்கனவே, கடந்த 11ம் தேதி காங்கிரஸ் மக்களவை எம்பி-க்கள் கூட்டம் நடைபெற்றது.

அதில், கலந்து கொண்ட மக்களவை எம்பி-க்கள் காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தியை, கட்சியின் தலைமையை ஏற்குமாறு வலியுறுத்தினர் என்பது குறிப்பிடத்தக்கது.

Tags : Sonia Gandhi ,MPs ,Meeting , Sonia Gandhi, Cong. Meeting of MPs
× RELATED மாநிலங்களவை எம்.பி.யாக பதவியேற்றார் சோனியா காந்தி..!!