×

சென்னையில் குடிசை வாரிய குடியிருப்பு பகுதிகளில் இருசக்கர வாகனங்களுக்கு தீ வைத்து சென்ற மர்ம நபர்கள்...! போலீஸ் வலைவீச்சு!!!

சென்னை:  சென்னையில் குடிசை வாரிய குடியிருப்பு பகுதிகளில் உள்ள 7 இருசக்கர வாகனங்களுக்கு மர்ம நபர்கள் தீ வைத்து கொளுத்தியது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. பெரும்பாக்கம் எழில் நகர் குடிசை வாரிய குடியிருப்புகளில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ள 7 இருசக்கர வாகனங்கள் அதிகாலை 3 மணியளவில் எரித்துள்ளன. பின்னர், வாகனங்களின் டயர் வெடிக்கும் சட்டம் கேட்டு குடியிருப்புவாசிகள் வந்து பார்த்தபோது, இருசக்கர வாகனங்கள் எரிந்து கொண்டிருப்பது தெரியவந்துள்ளது.

இதனைத்தொடர்ந்து, தீயணைப்பு வீரர்களுக்கு தகவல் அளிக்கப்பட்டது. பின்னர், அங்கு வந்த தீயணைப்பு வீரர்கள் பல மணி நேரம் போராடி தீயை கட்டுக்குள் கொண்டு வந்தனர். இதுகுறித்து அங்குள்ள மக்கள் தெரிவிப்பதாவது, இந்த பகுதிகளில் 20 ஆயிரத்திற்கும் மேற்பட்ட வீடுகள் கட்டப்பட்டுள்ளன. இதில் ஒரு லட்சத்துக்கும்  மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றனர். இந்த நிலையில் அருகில் எந்த விதமாக காவல் நிலையங்களும் இல்லை. தெரு விளக்குகள் சரியான முறையில் இயக்கப்படுவதில்லை. மேலும், குடியிருப்புகளுக்கு அருகிலேயே மதுபான கடைகளும் உள்ளன.

இதனால் இந்த பகுதிகளில் அடிக்கடி கொள்ளை சம்பவங்கள் நிகழ்ந்து கொண்டே இருக்கின்றனர். அந்த வகையில் தற்போது சில மர்ம நபர்கள் வாகனங்களுக்கு தீ வைத்து சென்றுள்ளனர். இதனால் போதிய பாதுகாப்பு வசதிகள் இல்லாததே இதுபோன்ற நிகழ்வுகளுக்கு காரணம் என்று அப்பகுதி மக்கள் குற்றம் சாட்டியுள்ளனர். இதற்கிடையில் கடந்த வாரம் பட்டா கத்திகளுடன் வீடுகளில் நுழையும் திருடர்கள் மளிகை பொருட்களை கொள்ளையடித்து சென்ற சிசிடிவி பதிவுகள் தற்போது வெளியாகியுள்ளது. இதனால், மர்ம நபர்களை உடனடியாக கைது செய்ய வேண்டும் என்று அப்பகுதி குடியிருப்புவாசிகள் வலிவுறுத்தியுள்ளனர். இந்த நிலையில், சிசிடிவி காட்சிகளின் அடிப்படையில் போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Tags : persons ,wheelers ,areas ,Chennai , set fire,two wheelers,
× RELATED கனடாவில் ரூ.133 கோடி மதிப்பிலான...