×

நெல்லை அம்பையில் காதல் திருமணத்தால் தகராறு...! இளைஞரை அடித்துக்கொன்ற பெண் வீட்டார்..! உடலை வாங்க மறுக்கும் உறவினர்கள்!!!

திருநெல்வேலி:  நெல்லை அம்பையில் காதல் திருமண தகராறில் இளைஞர் ஒருவரை பெண் வீட்டார் அடித்து கொலை செய்ததது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இதனால் உடலை வாங்க மறுத்து உறவினர்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். திருநெல்வேலி மாவட்டம் அம்பாசமுத்திரம் அருகே கௌதமபுரியில் ரவி என்பவர் தனது குடும்பத்துடன் வசித்து வருகிறார். இந்த கிராமத்தில் யாருக்கு திருமணம் நடந்தாலும் 1500 ரூபாய் வரி செலுத்த வேண்டும் என்பது ஊர்க்கட்டுப்பாடாகும்.

கௌதமபுரியில் சுமார் 500க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றனர். இந்த நிலையில், கடந்த 5 ஆண்டுகளுக்கு முன் ரவியின் மகள் காதல் திருமணம் செய்துள்ளார். இதனைத்தொடர்ந்து, தனது மகள் காதல் திருமணம் செய்துகொண்டதால், எனக்கும் மகளுக்கும் எவ்வித சம்மந்தமும் இல்லை இதனால் என்னால் பணம் ஏதும் செலுத்த முடியாது என ரவி பல ஆண்டுகளுக்கு முன்பே எழுதிக்கொடுத்துள்ளார்.

இந்த நிலையில் கடந்த 3 வருடத்திற்கு முன்பு ரவியின் மகள் இறந்துள்ளார். இதனால் துக்கம் விசாரிக்க வந்த 40 குடும்பத்தினரை ஊரை விட்டு திருப்பியனுப்பப்பட்டனர். இதனால் ஆத்திரமடைந்த பெண் வீட்டு உறவினர்கள் தற்போது மகளின் கணவனை அடித்தே கொன்று விட்டதாக புகார் எழுந்துள்ளது. இந்த நிலையில், இளைஞனின் உடலை வாங்க மறுத்து உறவினர்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

Tags : Nellai Ambai ,Relatives ,home , Nellai Ambai ,Relatives ,
× RELATED நாடாளுமன்றத்தில் உள்துறை அமைச்சக...