டெல்லி: சீன நிறுவனங்களின் நலன் காக்க நடவடிக்கை எடுக்கப்படும் என சீன தூதரக அதிகாரி தெரிவித்துள்ளார். டெல்லியில் உள்ள சீன தூதரகத்தின் செய்தித் தொடர்பாளர் ஜி ரோங் அறிக்கை வெளியிட்டுள்ளார். மேலும் 47 சீன செயலிகளுக்கு இந்தியா தடை விதித்த நிலையில், சீன தூதரகம் பதில் அளித்துள்ளது. இந்தியாவின் நடவடிக்கை சீன நிறுவனங்களின் நலன், அடிப்படை அருமையை பறிக்கிறது. சர்வதேச முதலீட்டாளர்களின் நலனை காக்கும் பொறுப்பு இந்திய அரசுக்கு உள்ளது எனவும் கூறியுள்ளார்.