சென்னை: முன் அனுமதியின்றி உயர்கல்வி படித்ததாகக் கூறி 5,000 ஆசிரியர்கள் மீது நடவடிக்கை எடுப்பதற்கு தங்கம் தென்னரசு கண்டனம் தெரிவித்துள்ளார். முன்னாள் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் தங்கம் தென்னரசு தமிழக தொடக்கக் கல்வித்துறைக்கு கண்டனம் தெரிவித்துள்ளார். உயர்கல்வி கற்க முன் அனுமதியை பெறவில்லை என்ற விதியை காட்டி நடவடிக்கை எடுப்பது வேதனையானது என அவர் தெரிவித்துள்ளார்.