×

ஆஸ்கர் விருது வென்ற பின் இந்தி பட வாய்ப்புகள் மறுப்பு: ஏ.ஆர். ரகுமானைத் தொடர்ந்து ரசூல் பூக்குட்டி பரபரப்பு குற்றச்சாட்டு!!!

கேரளா: ஆஸ்கர் விருது வென்ற பிறகு இந்தி திரைப்படங்களில் தனக்கு திட்டமிட்டு வாய்ப்பு மறுக்கப்பட்டதாக கேரளாவை சேர்ந்த பிரபல இசை கலைஞர் ரசூல் பூக்குட்டி பரபரப்பு குற்றச்சாட்டை கூறியுள்ளார். இதே குற்றச்சாட்டை ஓரிரு நாட்களுக்கு முன்பு இசையமைப்பாளர் ஏ.ஆர். ரகுமான் தெரிவித்து, சினிமா துறையை பெரும் பரபரப்புக்கு உள்ளாக்கினார். தற்போது, ரசூல் பூக்குட்டியும் இந்தி திரைத்துறை மீது குற்றச்சாட்டை கூறியுள்ளார்.

ஸ்லம்டாக் மிலினர் என்ற படத்திற்கு சிறந்த இசைக்கலவை தொகுப்புக்காக ரசூல் பூக்குட்டி ஆஸ்கர் விருது பெற்றவராவார். ஆனால் ஆஸ்கர் விருது வென்ற பிறகும் தம்மை இந்தி பட தயாரிப்பாளர்கள் யாரும் அழைக்கவில்லை என்றும் தம்மை வேண்டாம் என்று சில நிறுவனங்கள் நேரடியாகவே கூறிவிட்டதாகவும் ரசூல் பூக்குட்டி தனது டுவிட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார். ஸ்லம்டாக் மிலினர் படத்திற்கு இசையமைத்ததற்காக 2 ஆஸ்கர் விருதுகளை வென்ற ஏ.ஆர்.ரகுமான் இந்தி பட உலகில் தமக்கு எதிராக ஒரு கூட்டம் சதி செய்வதாக புகார் தெரிவித்திருந்தார்.

இந்த நிலையில், இந்தி சினிமா துறை மீது கேரளாவின் ரசூல் பூக்குட்டி இந்த பரபரப்பு குற்றச்சாட்டை கூறியுள்ளார். மேலும், உயிரை மாய்த்துக்கொண்ட சுஷாந்த்தின் வாய்ப்புகளை குறிப்பிட்ட கும்பல் தடுத்ததாக கூறப்படுகிறது. அதேபோல் தென்னிந்திய கலைஞர்களையும் புகழ்பெற விடாமல் இந்தி சினிமா உலகம் தடுக்கிறது என்ற குற்றச்சாட்டும் தொடர்ந்து வலுப்பெற்று வருகிறது.

Tags : A.R. ,Rasool Pookutty ,Raghuman , Resul Pookutty ,A.R Raghuman ,Oscar award
× RELATED பைக்கில் அதிவேகமாக சென்ற தகராறு:...