மதுரை: சாத்தான்குளம் தந்தை-மகன் கொலை வழக்கில் கைதான காவலர்கள் முத்துராஜ் மற்றும் முருகனுக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது. மதுரை சிறையில் அடைக்கப்பட்டுள்ள முத்துராஜ் மற்றும் முருகனுக்கு கொரோனா இருப்பது பரிசோதனையில் கண்டறியப்பட்டுள்ளது. ஏற்கனவே முத்துராஜ், முருகனை விசாரித்த டெல்லி சிபிஐ அதிகாரிகள் 5பேருக்கு கொரோனா தொற்று உறுதியனது.