×

மாவட்டத்தில் பிளஸ் 2 மறுதேர்வு 72 மாணவர்கள் எழுதினர்

திருவள்ளூர்: கொரோனா ஊரடங்கு உத்தரவால், பிளஸ் 2 தேர்வில் பங்கேற்காத மாணவர்களுக்கான தேர்வு, திருவள்ளூர் மாவட்டத்தில் 22 மையங்களில் நேற்று நடைபெற்றது. கொரோனா ஊரடங்கு உத்தரவால் கடந்த மார்ச் மாதம் 24ம் தேதி

நடந்த பிளஸ் 2 வேதியியல், கணக்கு பதிவியல், புவியியல் பாடங்களுக்கான தேர்வுகளில் சில மாணவர்கள் பங்கேற்கவில்லை.இதையொட்டி தேர்வில் பங்கேற்காத மாணவர்களுக்கான தேர்வு நேற்று நடைபெற்றது.திருவள்ளூர் மாவட்டத்தில்

உள்ள 5 கல்வி மாவட்டங்களில், திருவள்ளூர் ஞான வித்யாலயா பள்ளி உட்பட 22 தேர்வு மையங்களில், கடந்த கல்வியாண்டில் பயின்ற மாணவர்கள், தனி தேர்வர்கள் என மொத்தம் 72 பேர் நேற்று தேர்வெழுதினர். இதற்காக அந்தந்த மாவட்ட

கல்வி அலுவலர்களுக்கு உரிய ஆலோசனைகள், வழிகாட்டுதல்கள் வழங்கப்பட்டு இருந்தது. அதன்படி தேர்வு எழுத வந்த மாணவர்களுக்கு உரிய பரிசோதனை செய்து தேர்வு மையத்துக்குள் அனுமதிக்கப்பட்டனர்.

Tags : re-selection ,district , In the district, plus 2 re-sit, 72 students, wrote
× RELATED திருவள்ளூர் மாவட்டம் மீஞ்சூர் அருகே...