×

கொரோனாவால் பசி, பட்டினி ஏரியில் குதித்து இளம்பெண் தற்கொலை

ஆவடி: ஆவடி சேக்காடு ஏரியில் ஒரு பெண் சடலம் மிதப்பதாக போலீசாருக்கு தகவல் வந்தது. சம்பவ இடத்துக்கு தீயணைப்பு வீரர்களுடன் சென்ற போலீசார் ஏரியில் மிதந்த சடலத்தை கைப்பற்றி விசாரணை நடத்தினர். அதில் இறந்த பெண்

புவனேஸ்வரி என்பது தெரியவந்தது. ஆவடி சேக்காடு, டி.ஆர்.ஆர் நகர், திருவள்ளுவர் தெருவை சேர்ந்தவர் பாலாஜி (30). டைல்ஸ் ஒட்டும் கூலித்தொழிலாளி. மனைவி புவனேஸ்வரி (25). இவர்களுக்கு இளவரசி (5), நிகிதா (3), தபிதா என்ற 9மாத

குழந்தை உள்ளது.

புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிந்துள்ளனர். கடந்த 4மாதமாக ஊரடங்கால் பாலாஜிக்கு எந்த வேலையும் இல்லை. குடும்பம் வறுமையில் வாடியது. இதனால், புவனேஸ்வரியால் கைக் குழந்தைக்கு தாய் பால் கொடுக்க முடியவில்லை.   

மற்ற இரு குழந்தைகளுக்கும் உணவு தரமுடியவில்லை. இதனால், மனம் உடைந்த புவனேஸ்வரி ஏரியில் குதித்து தற்கொலை செய்து கொண்டுள்ளார். என தெரியவந்தது. ஏரியில் புவனேஸ்வரியின் சடலம் மட்டும் கிடைத்தது. குழந்தை யின்

உடல் கிடைக்கவில்லை.


Tags : Teen ,suicide ,lake , Corona, hunger, starvation, jumping into the lake, teen, suicide
× RELATED பைக் தீப்பிடித்து எரிந்ததில் வாலிபர் உடல் கருகி பலி