×

விளையாடச் சென்ற மாணவன் தலையில் அடிபட்டு பலி

அம்பத்தூர்:அம்பத்தூரை அடுத்த அத்திப்பட்டு, மாரியம்மன் கோவில் தெருவை சேர்ந்தவர் வெங்கடேசன் மகன் ஜெகதீசன் (16). 10ம் வகுப்பு படித்து வந்தான். நேற்று முன்தினம் மாலை ஜெகதீசன் நண்பர்களுடன் விளையாட அம்பத்தூர்  

வி.ஜி.என். சாந்தி நகரில் உள்ள பூட்டியிருந்த பூங்காவிற்குள் சுவர் ஏறி குதித்துள்ளான். அப்போது, அவன் கீழே விழுந்து தலையின் பின்பகுதியில் அடிபட்ட ஜெகதீசனை அம்பத்தூரில் தனியார் மருத்துவமனைக்கும் பிறகு கீழ்ப்பாக்கம் அரசு

மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு பரிசோதனை செய்த டாக்டர்கள், ஜெகதீசன், வரும் வழியிலேயே இறந்துவிட்டதாக கூறினர்.

Tags : student , Going to play, student, head, beaten to death
× RELATED சிவில் சர்வீஸ் தேர்வில் போட்டிகள்...