×

வழக்கறிஞர்கள் ஆர்ப்பாட்டம்

செங்கல்பட்டு: வழக்கறிஞர்கள் சங்கங்களோடு கலந்து பேசி நீதிமன்றங்களை உடனடியாக திறக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். அனைத்து வழக்கறிஞகளுக்கும் கொரோனா நிவாரணமாக வட்டியில்லா கடன்கள் வழங்க வேண்டும். இளம் வழக்கறிஞர்களுக்கு அரசு அறிவித்த ரூ.3 ஆயிரம் உடனே வழங்க வேண்டும் என வழியுறுத்தி அகில இந்திய வழக்கறிஞர்கள் சங்கம் சார்பில் செங்கல்பட்டு நீதிமன்றம் வளாகத்தில் நேற்று கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது. அகில இந்திய வழக்கறிஞர்கள் சங்க மாவட்ட நிர்வாகி ஜோஸ்பின் விஜி  தலைமை தாங்கினார். மூத்த வழக்கறிஞர்கள் தணிகைவேல், ராமசாமி, ஜெயபிரபு ஆகியோர் கோரிக்கைகளை வலியுறுத்தி கண்டன கோஷமிட்டனர். முடிவில் சங்க மாநிலக் குழு உறுப்பினர் ருத்ரநாத் விளக்கி பேசினார்.

Tags : Lawyers , Lawyers, Demonstration
× RELATED திண்டிவனத்தில் தேனீக்கள் கொட்டியதில்...