வாலாஜாபாத்: முன்னாள் ஜனாதிபதி அப்துல்கலாம் நினைவு தினத்தையொட்டி, வாலாஜாபாத் அடுத்த பேட்டை பகுதி பெயின்டர் சங்கம் சார்பில் நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சி ஏகனாம்பேட்டையில் நடந்தது. இதில் சங்க உறுப்பினர்கள் சமூக இடைவெளியை பின்பற்றி, அப்துல்கலாம் படத்துக் மாலை அணிவித்து, மெழுகுவர்த்தி ஏற்றி மௌன அஞ்சலி செலுத்தினர். தொடர்ந்து, பெயின்டர்கள் குடும்பங்களுக்கு மளிகை பொருட்கள் வழங்கப்பட்டன.