×

பங்காளாவில் காவலாளிக்கு கத்தி வெட்டு சென்னை வாலிபர்கள் 4 பேர் கைது

மாமல்லபுரம்: மாமல்லபுரம் அடுத்த தெற்குபட்டு கிராமத்தில் சென்னையை ஒருவரது பங்களா வீடு உள்ளது. இங்கு கடலூர் மாவட்டத்தை சேர்ந்த ராஜேந்திரன் (42), அவரது 35 வயது மனைவி, மாமனார் மற்றும் 2 குழந்தைகளுடன் தங்கி

வேலை செய்கின்றனர். கடந்த 23ம் தேதி இரவு மர்மநபர்கள் 3 பேர், பங்களா வீட்டில் நுழைந்தனர். அப்போது, அங்கிந்த காவலாளி ராஜேந்திரனை சரமாரியாக தாக்கி கட்டிபோட்டு, அவரது மனைவி அணிந்திருந்த கம்மல், கொலுசு ஆகியவற்றை பறித்தனர். பின்னர், மர்மநபர்களில் ஒருவர், காவலாளியின் மனைவியை பலாத்காரம் செய்ததாக கூறப்படுகிறது.

இதுதொடர்பாக, மாமல்லபுரம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்தனர். அதில், கிழக்கு கடற்கரை சாலையில் அமைக்கப்பட்டுள்ள சிசிடிவி கேமராவை ஆய்வு செய்தபோது, 3 பேர் ஒரே பைக்கில் சென்றது பதிவாகி இருந்தது. இதையடுத்து

பைக் எண்ணை வைத்து விசாரித்ததில், சென்னையை சேர்ந்தவர்கள் என தெரியவந்தது. இதைதொடர்ந்து போலீசார் சென்னை பெரம்பூர் கார்த்திகேயன் (20), மிதுன் (21), செங்குன்றம் தினேஷ் (26), சுதர்சன் (20) ஆகியோரை கைது செய்தனர். அவர்களிடம் இருந்து 2 கத்தி, ஸ்டன்கன் எனப்படும் மின்சார கருவி, செல்போன், 2 பைக் ஆகியவற்றை பறிமுதல் செய்தனர்.

Tags : teenagers ,guard ,Bangalore. , Bangla, guard, knife cut, Chennai teenagers, 4, arrested
× RELATED பெங்களூரு விமான நிலையத்தில்...