×

தாயுடன் கள்ளக்காதலால் ஆத்திரம் ஜவுளிக்கடை செக்யூரிட்டி ஓடஓட வெட்டி கொலை: நண்பர்களுடன் வாலிபர் தப்பி ஓட்டம்

சென்னை: தாயுடனான கள்ளக்காதலை கைவிடாததால் ஆத்திரமடைந்த வாலிபர் தனது நண்பர்களுடன் சேர்ந்து ஜவுளிக்கடை காவலாளியை ஓடஓட வெட்டி படுகொலை செய்த சம்பவம் மேற்கு மாம்பலம் பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.
போரூரை சேர்ந்தவர் முனியாண்டி(46). இவர், சைதாப்பேட்டையில் உள்ள ஜவுளிக்கடை ஒன்றில் காவலாளியாக வேலை செய்து வந்தார். இவருக்கு சொர்ணகிளி என்ற மனைவியும் 3 பிள்ளைகள் உள்ளனர். மனைவியுடன் ஏற்பட்ட கருத்து

வேறுபாடு காரணமாக கடந்த 5 ஆண்டுகளாக பிரிந்து வாழ்ந்து வந்தார்.

முனியாண்டிக்கு மேற்கு மாம்பலம் சடையப்பன் ெதருவில் வசித்து வரும் செல்வி(45) என்பவருடன் கள்ளத்தொடர்பு இருந்துள்ளது. செல்வியின் கணவர் கணேசன் இறந்துவிட்டார். செல்விக்கு இரண்டு மகன்கள் உள்ளனர். தாய் செல்வியின்

நடவடிக்கை பிடிக்காமல் அவரது மூத்த மகன் ராஜேஷ் தனது மனைவியுடன் பெரும்பாக்கத்தில் தனியாக வசித்து வருகிறார். இளைய மகன் வேலாயுதம் திருமணம் ஆகாமல் சைதாப்பேட்டை ஆடுதொட்டி பகுதியில் தனியாக வசித்து வருகிறார்.

வேலாயுதத்திற்கு தனது தாய் செல்வியின் கள்ளக்காதல் பிடிக்கவில்லை. இதனால் பலமுறை அவரது தாய் மற்றும் கள்ளக்காதலனான காவலாளி முனியாண்டியை கடுமையாக கண்டித்து வந்துள்ளார். ஆனாலும் இருவரும் தங்களது

கள்ளக்காதலை கைவிடாமல் கணவன் மனைவிபோல் ஒன்றாக வாழ்ந்து வந்தனர்.ஒரு கட்டத்தில் ஆத்திரமடைந்த வேலாயுதம் தனது நண்பர்களுடன் சேர்ந்து தாயின் கள்ளக்காதலனை கொலை செய்ய திட்டமிட்டார். அதன்படி நேற்று

அதிகாலை முனியாண்டி தனது காதலி செல்வி வீட்டிற்கு பணி முடிந்து நடந்து சென்று கொண்டிருந்தார்.

திட்டமிட்டபடி வேலாயுதம் நண்பர்களுடன் பின் தொடர்ந்தார். முனியாண்டி ஜோன்ஸ் ரோடு பழைய மாம்பலம் சாலை சந்திப்பில் வரும்போது, வேலாயுதம் தனது நண்பர்களுடன் சேர்ந்து முனியாண்டியை அரிவாளால் சரமாரியாக வெட்டினர்.
இதில் வலி தாங்க முடியாமல் முனியாண்டி அலறியபடி ஓடினார். ஆனாலும் வேலாயுதம் விடாமல் துரத்தி சென்று ஓட ஓட வெட்டி சாய்தார். இதில் சம்பவ இடத்திலேயே முனியாண்டி ரத்த வெள்ளத்தில் துடிதுடித்து உயிரிழந்தார். முனியாண்டி இறந்ததை உறுதிப்படுத்திய பின்னரே வேலாயுதம் நண்பர்களுடன் அங்கிருந்து தப்பி சென்றுள்ளார். இதுகுறித்து, தகவல் அறிந்த குமரன் நகர் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று இறந்து கிடந்த முனியாண்டி உடலை மீட்டு, பிரேத பரிசோதனைக்காக ராயப்பேட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். பின்னர் கள்ளக்காதலி செல்வி கொடுத்த புகாரின் படி தலைமறைவாக உள்ள வேலாயுதம் உட்பட 4 பேரை போலீசார் தேடி வருகின்றனர். இந்த சம்பவத்தால் அப்பகுதியே பரபரப்பாக காணப்பட்டது.

Tags : love affair ,death ,friends ,Valipar , False love with mother, rage, textile shop security, hacking, friend, teenager, escape
× RELATED துபாயில் 2 ஆண்டுகளில் பெய்ய வேண்டிய...