×

கன்டெய்னர் பெட்டியை உடைத்து ரூ.50 லட்சம் மதிப்பிலான 224 டயர்கள் கொள்ளை: 4 பேர் கைது

திருவொற்றியூர்: திருவொற்றியூர் சரக்கு முனையத்திற்கு டயர்கள் அடங்கிய 2 கன்டெய்னர் பெட்டியில் சீல் உடைக்கப்பட்டு இருப்பதாக  அங்கிருந்த அலுவலர்களுக்கு சந்தேகம் எழுந்தது. இதையடுத்து இது சம்பந்தமாக திருவொற்றியூர் காவல்  

உதவி ஆணையர் ஆனந்தகுமாருக்கு புகார் கொடுத்தனர். தகவலறிந்த திருவொற்றியூர் போலீசார், சரக்கு முனையத்திற்கு விரைந்து வந்து சோதனையிட்டனர். அப்போது, அதில் வைக்கப்பட்டிருந்த சீல் உடைக்கப்பட்டது தெரியவந்தது. இதையடுத்து கன்டெய்னர் லாரி டிரைவர்களை விசாரித்தபோது டிரைவரும் அவரது கூட்டாளிகளும் சேர்ந்து கன்டெய்னரில் உள்ளே இருந்த டயர்களை திருடியது தெரியவந்தது.

இதுகுறித்து போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது, திருவொற்றியூரை சேர்ந்த இளமாறன் (28), காளிமுத்து (31), ஜீவானந்தம் (30) ஆகியோர் கன்டெய்னர்  லாரி டிரைவராக உள்ளனர். இவர்கள் 3 பேரும் கடந்த 24ம் தேதி வெளிநாட்டுக்கு செல்ல

வேண்டிய டயர்கள் அடங்கிய கன்டெய்னர் பெட்டியை 2 ட்ரெய்லர் லாரியில் ஏற்றி ஸ்ரீபெரும்புதூரில் இருந்து ஓட்டி வந்துள்ளனர். பின்னர் புதுவண்ணாரப்பேட்டை செரியன் நகரைச் சேர்ந்த அக்பர்(38) மற்றும் அவரது கூட்டாளிகளின் உதவியுடன்

எண்ணூர் காமராஜர் நகர் பகுதியில் உள்ள ஒரு குடோனுக்கு எடுத்துச் சென்று கன்டெய்னர் பெட்டியின் சீலை உடைத்து அதிலிருந்து 224 டயர்களை திருடி பின்னர் மீண்டும் சீல் வைத்தது தெரியவந்தது. 4 பேரையும் கைது செய்து ரூ.50

லட்சம் மதிப்புள்ள டயர்களை பறிமுதல் செய்தனர்.

Tags : Container box, broken, Rs 50 lakh, 224 tires, robbery, 4 arrested
× RELATED ஒசூர் அருகே 17 வயது பெண்ணுக்கு பாலியல் தொந்தரவு கொடுத்த மதபோதகர் கைது..!!