×

ஸ்டான்லி மருத்துவமனையில் கொரோனாவுக்கு வாலிபர் பலி

தண்டையார்பேட்டை: திருவள்ளூர் மாவட்டம், திருத்தணி காவணை தெருவை சேர்ந்த 32 வயது வாலிபருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டது. இதையடுத்து, அவரை சென்னை ஸ்டான்லி அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அவருக்கு தீவிர

சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. இந்நிலையில், சிகிச்சை பலன் அளிக்காமல் நேற்று காலை வாலிபர் பரிதாபமாக உயிரிழந்தார். இதையடுத்து சுகாதாரத்துறை அதிகாரிகள் முன்னிலையில், வாலிபரின் உடல் திருத்தணியில் உள்ள சுடுகாட்டில் அடக்கம் செய்யப்பட்டது. மேலும், இறந்தவரின் வீடு சீல் வைக்கப்பட்டு கிருமிநாசினி தெளிக்கப்பட்டு சுகாதாரத்துறையின் கட்டுப்பாட்டில் கொண்டுவரப்பட்டுள்ளது. வாலிபரின் உறவினர்களுக்கும் கொரோனா பரிசோதனை செய்யப்பட்டுள்ளது.

Tags : Walibur ,Stanley Hospital ,Corona ,Valipar , Stanley, Hospital, Corona, Valipar Kills
× RELATED தூய்மை பணியாளர்களுக்கு ஊக்கத்தொகை:...