சென்னை: தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் மூலம், தமிழ்நாடு அமைச்சுப்பணி தொகுதியின் கீழ் நெடுஞ்சாலைத் துறையில் தேர்வு செய்யப்பட்ட இளநிலை உதவியாளர் பணியிடங்களுக்கு பணி நியமன ஆணை வழங்கும் நிகழ்ச்சி தலைமை செயலகத்தில் நேற்று நடைபெற்றது. நெடுஞ்சாலைத் துறையில் காலியாக இருந்த 105 இளநிலை உதவியாளர் பணியிடங்களுக்கு தேர்வானவர்களுக்கு பணி நியமன ஆணைகள் வழங்கப்பட்டது. அதன் அடையாளமாக 5 பேருக்கு பணிநியமன ஆணைகளை முதல்வர் எடப்பாடி பழனிசாமி வழங்கினார். இந்நிகழ்ச்சியில், தலைமைச் செயலாளர் சண்முகம், நெடுஞ்சாலைகள் மற்றும் சிறு துறைமுகங்கள் துறை முதன்மைச் செயலாளர் கார்த்திக் உள்ளிட்ட அதிகாரிகள் பங்கேற்றனர்.