×

கயத்தாறு அருகே பரபரப்பு; எரிந்த நிலையில் மனித எலும்புகூடு கண்டுபிடிப்பு: கொலையா?...போலீஸ் விசாரணை

கயத்தாறு: கயத்தாறு அருகே உடல் எரிந்த நிலையில் மனித எலும்பு கூடு கண்டுபிடிக்கப்பட்டது.  இறந்தது யார்? கொலை செய்யப்பட்டாரா?  என்பது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். தூத்துக்குடி மாவட்டம் கயத்தாறு அருகே தவுடுதாங்கிகுளம் வயல்பகுதியில் ஆள்நட மாட்டம் இல்லாத காட்டு பகுதியில் உடல் எரிந்த நிலையில் மனித எலும்பு கிடந்தது. இன்று காலை அந்த வழியாக சென்ற ஆடு மேய்க்கும் தொழிலாளர்கள், இதனை கண்டு அதிர்ச்சி அடைந்து போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். கயத்தாறு போலீசார் சம்பவ இடத்தை பார்வையிட்டு விசாரணை நடத்தினர். இறந்த நபர் ஆணா? பெண்ணா என்பது தெரியவில்லை. 15 நாட்களுக்கு முன் உடல் எரிக்கப்பட்டு இருக்கலாம் என கூறப்படுகிறது.

கயத்தாறு போலீசார், எலும்புகூட்டை கைப்பற்றி பிரேத பரிசோதனை மற்றும் தடயவியல் பரிசோதனைக்காக நெல்லை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மர்ம நபர்கள்,  ஆண் அல்லது பெண்ணை கடத்தி வந்து கொலை செய்து உடலை எரித்தனரா? அல்லது வேறு இடத்தில் கொலை செய்து உடலை கொண்டு வந்து எரித்தனரா? என்பது  தெரியவில்லை. கயத்தாறு மற்றும் சுற்றுவட்டார பகுதியில் கடந்த 15 நாட்களில் யாராவது மாயமானார்களா? என்பது குறித்து போலீசார் விசாரணை நடத்தி இறந்த நபர் யார்? மற்றும் கொலை செய்த கும்பலை தேடி வருகின்றனர். கயத்தாறு பகுதியில் மனித எலும்புகூடு மீட்கப்பட்ட சம்பவம் அப்பகுதி மக்களிடம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Tags : Kayatharu ,Police investigation , Torture, burn condition, human skeleton, police, investigation
× RELATED மேலூரில் டிபன் பாக்ஸ் குண்டு வீச்சு: போலீசார் விசாரணை