மதுரை: விவசாயி அணைகரை முத்து மரணம் குறித்து சிபிசிஐடி விசாரணை கோரும் வழக்கு நாளைக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது. அணைகரை முத்து மனைவி பாலம்மாள் மனுமீதான விசாரணையை உயர்நீதிமன்ற மதுரை கிளை ஒத்திவைத்தது. முத்து உயிரிழப்பு தொடர்பான மருத்துவ ஆய்வு விவரங்கள் கிடைத்ததால் வழக்கை ஒத்திவைக்க அரசு தரப்பு கோரியுள்ளது.