×

ரத்த அழுத்த மாத்திரைகளை உட்கொண்டு தற்கொலைக்கு முயன்ற நடிகை விஜயலட்சுமியிடம் விரைவு நீதிமன்ற மாஜிஸ்திரேட் நேரில் விசாரணை..!!

சென்னை: ரத்த அழுத்த மாத்திரைகளை உட்கொண்டு தற்கொலைக்கு முயற்சித்த நடிகை விஜயலட்சுமியிடம் விரைவு நீதிமன்ற மாஜிஸ்திரேட் நேரில் சென்று விசாரணை நடத்தியுள்ளார். பிரண்ட்ஸ், பாஸ் என்கிற பாஸ்கரன் உள்ளிட்ட படங்களில் நடித்துள்ள விஜயலட்சுமி நேற்று திடீரென தற்கொலை செய்துகொள்ள போவதாக கூறி, சமூக வலைத்தளங்களில் உருக்கமான வீடியோ ஒன்றை வெளியிட்டது பரபரப்பை ஏற்படுத்தியது.

இதையடுத்து ரத்த உயரழுத்த மாத்திரைகளை உட்கொண்டு தற்கொலைக்கு முயற்சித்த விஜயலட்சுமியை மீட்ட நடிகை காயத்ரி ரகுராம், சென்னை அடையாறில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தார். இந்த நிலையில் விரைவு நீதிமன்ற மாஜிஸ்திரேட் வெங்கடேசன் மருத்துவமனைக்கு சென்று விஜயலட்சுமியிடம் விசாரணை நடத்தியிருக்கிறார். அப்போது தற்கொலைக்கு முயற்சித்தது குறித்து விஜயலட்சுமி அளித்த வாக்குமூலத்தை மாஜிஸ்திரேட் பதிவு செய்துக்கொண்டார்.

அவர் அளிக்கும் அறிக்கையின் அடிப்படையில் போலீசார் அடுத்தகட்ட நடவடிக்கைகளை மேற்கொள்ள திட்டமிட்டுள்ளனர். தமக்கு தொடர்ச்சியாக கொலை மிரட்டல்கள் வருவதாகவும், இதுகுறித்து புகார் அளித்தும் போலீசார் எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை என்று விஜயலட்சுமி வெளியிட்ட வீடியோவில் உருக்கமாக தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.

Tags : Vijayalakshmi ,track magistrate , Actress Vijayalakshmi ,suicide ,blood pressure pills ,
× RELATED மணப்பாறை அருகே கார் பள்ளத்தில் கவிழ்ந்த விபத்தில் உயிரிழப்பு 3 ஆக உயர்வு..!!