×

ஓபிசி பிரிவினருக்கு இடஒதுக்கீடு விவகாரத்தில் வரலாற்று சிறப்பு மிக்க தீர்ப்பு...இது சமூக நீதிக்கு கிடைத்த வெற்றி: அமைச்சர் ஜெயக்குமார்

சென்னை: ஓபிசி பிரிவினருக்கு இடஒதுக்கீடு வழங்கும் விவகாரத்தில் வரலாற்று சிறப்பு மிக்க தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளதாக மீன்வளத்துறை அமைச்சர் ஜெயக்குமார் கூறியுள்ளார். தமிழகத்தில் 69 சதவிகித இடஒதுக்கீடு அமலில் இருக்கும் நிலையில் மருத்துவப் படிப்புக்கு மத்திய அரசு 27 சதவிகித இடஒதுக்கிடு எனச் சொல்வது சரியானது அல்ல என்று தமிழக கட்சிகள் நீதிமன்றத்தில் வழக்குத் தொடுத்தன. அதன் விசாரணை பல கட்டங்களில் நடைபெற்றது. அதன் தீர்ப்பு இன்று வழங்கப்பட்டது. அதன்படி, ஓபிசி பிரிவினருக்கு 50 சதவிகித இடஒதுக்கீடு விஷயத்தில் மத்திய அரசே சட்டரீதியாக உத்தரவிட முடியும். அதனால், மத்திய அரசே இதர பிற்படுத்தப் பட்ட பிரிவினருக்கு 50 சதவிகித இட ஒதுக்கீடு அளிக்கும் விஷயம் தொடர்பாக சட்டத்தை இயற்றி வெளியிட வேண்டும். இதை, அடுத்த  மூன்று மாதங்களுக்குள் முடிவு செய்ய வேண்டும், என்று நீதிமன்றம் வலியுறுத்தியுள்ளது.

இந்நிலையில், இதுகுறித்து செய்தியாளர்களிடம் பேசிய அவர், நரசிம்மராவ் பிரதமராக இருந்தபோது ஜெயலலிதா பிற்படுத்தப்பட்டவர்களுக்கான 50 சதவீத ஒதுக்கீடு மற்றும் தாழ்த்தப்பட்டவர்களுக்கு 19 சதவீத ஒதுக்கீடு என 69 சதவீத இட ஒதுக்கீட்டை அமல்படுத்த வாதம் செய்தார். பிரதமரும் ஒப்புக்கொண்டு, அரசியலமைப்புச் சட்டத்தை திருத்தி 9வது அட்டவணையில் இணைக்கப்பட்டது. இதனால்தான் சமூக நீதி காத்த வீராங்கனை என முன்னாள் முதல்வர் ஜெயலலிதா பாராட்டப்பட்டார். மருத்துவப் படிப்பில் ஓபிசிக்கு 50 சதவீத இட ஒதுக்கீடு வழங்கப்படாததை எதிர்த்து அதில் நாம் வழக்குத் தொடுத்தோம். வரலாற்றுச் சிறப்பு மிக்க தீர்ப்பை உயர் நீதிமன்றம் இன்று வழங்கியுள்ளது. தீர்ப்பின்படி குழு அமைத்து 3 மாதத்தில் மத்திய அரசு அமல்படுத்த வேண்டும் என உத்தரவிட்டுள்ளது. அருமையான ஒரு தீர்ப்பு. இது சமூக நீதிக்கு கிடைத்த வெற்றி என்று அதிமுக கருதி பாராட்டுகிறது. இந்த விவகாரத்தில் மத்திய அரசு எவ்வித மேல்முறையீடும் செய்யாமல் தீர்ப்பை மதிக்கும் என நம்புகிறோம், என கூறியுள்ளார்.



Tags : Jayakumar ,victory , OBC, Reservation, Judgment, Minister Jayakumar
× RELATED பொய் சொல்லும் அண்ணாமலைக்கு ஒரு...