சென்னை: வெளிநாடுகளில் உள்ள உறவினர்களுடன் முருகன், நளினி பேச அனுமதிக்குமாறு மத்திய அரசுக்கு சென்னை உயர்நீதிமன்றம் பரிந்துரை செய்துள்ளது. உறவினர்களுடன் வீடியோ கால் மூலம் சிறையில் இருந்து இருவரும் ஒரு நாள் பேச அனுமதிப்பது குறித்து பதிலளிக்க சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.