திருச்சி: திருச்சி உறையூரில் தனியார் ஆய்வகம், மருத்துவமனையை மூட மாநகராட்சி உத்தரவிட்டுள்ளது. கொரோனா பரிசோதனை முடிவுகளை முன்னுக்குப்பின் முரணாக வெளியிட்டதாக குற்றம் சாட்டப்பட்டுள்ளது. 4 மாடி கட்டிடத்தில் அமைந்துள்ள ஆய்வகம் விதிகளுக்கு புறம்பாக கட்டப்பட்டுள்ளதால் அதிகாரிகள் நடவடிக்கை எடுத்துள்ளனர்.