சென்னை: அகில இந்திய ஒதுக்கீட்டில் ஒபிசி-க்கு இடஒதுக்கீடு தர மத்திய அரசு சட்டம் இயற்றலாம் என்று உயர்நீதிமன்றம் கருத்து தெரிவித்துள்ளது. ஒபிசி-க்கு 50% இடஒதுக்கீடு தர உச்சநீதிமன்றம் தான் முடிவு செய்ய முடியும் என்பதை ஏற்க முடியாது என்று கூறியுள்ளது. மருத்துவ மேற்படிப்புகளில் ஓபிசிக்கு 50 சதவீதம் இடஒதுக்கீடு வழக்கு தீர்ப்பை சென்னை உயர்நீதிமன்றத்தில் வாசிக்கப்படுகிறது. இடஒதுக்கீடு கோரி அதிமுக, திமுக, காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகள் வழக்கு தொடர்ந்தது.