டெல்லி: இந்தியாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 14 லட்சத்து 35 ஆயிரத்தை தாண்டியது. உலகையே ஆட்டிப்படைக்கும் கொரோனா வைரஸ் இந்தியாவிலும் காட்டுத்தீயாக பரவி வருகிறது. கொரோனா வைரஸால் இந்தியாவில் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 14,35,453-ஆக அதிகரித்துள்ளது. கடந்த 24 மணிநேரத்தில் மட்டும் 49,931 பேர் புதிதாக பாதிக்கப்பட்டுள்ளனர்.
கொரோனாவால் இதுவரை 32,771 பேர் உயிரிழந்த நிலையில், கடந்த 24 மணி நேரத்தில் 708 உயிரிழந்துள்ளனர். இதுவரை 9,17,568 பேர் கொரோனா பிடியில் இருந்து குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். கடந்த 24 மணி நேரத்தில் 31,991 பேர் குணமடைந்துள்ளனர். தற்போது வரை கொரோனாவால் பாதிக்கப்பட்டு 4,85,114 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர் என்றும் மத்திய சுகாதார அமைச்சகம் அறிவித்துள்ளது
இந்தியாவில், அதிகபட்சமாக மகாராஷ்டிராவில் 3,75,799 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. இதுவரை 13,656 பேர் உயிரிழந்துள்ள நிலையில், 2,13,238 பேர் குணமடைந்துள்ளனர். தற்போது வரை 1,48,905 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்த வரிசையில் தமிழகம் 2-வது இடத்தில் உள்ளது. தமிழகத்தில் 2,13,723 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. இதுவரை 3,494 பேர் உயிரிழந்துள்ள நிலையில், 1,56,526 பேர் குணமடைந்துள்ளனர். தற்போது வரை 53,703 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
Tags : time ,corona victims ,India , 49,931 people affected for the first time in a single day: the number of corona victims in India has crossed 14.35 lakh; 4.85 lakh people were treated