விழுப்புரம: விழுப்புரத்தில் நேற்று முழு ஊரடங்கினை மீறியதாக 273 பேர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. ஒரே நாளில் 273 வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டதாக காவல்துறை தகவல் தெரிவித்துள்ளது. கொரோனா ஊரடங்கில் 33,742 வழக்குகள் போலீஸ் பதிவு செய்துள்ளது. மேலும் 34,164 பேர் கைது செய்து விடுதலை செய்யப்பட்டதாக தகவல் தெரிவிக்கின்றன.