சென்னை: சென்னை குமரன் நகரில் ஜவுளிக்கடை காவலாளி முனியாண்டி கத்தியால் குத்திக் கொலை செய்யப்பட்டுள்ளார். தாயுடன் தவறான தொடர்பு வைத்திருந்ததால் முனியாண்டியை செல்வி என்பவரின் மகன் வேலாயுதம் கொலை செய்துள்ளார். நண்பர்களுடன் சேர்ந்து ஓட ஓட விரட்டி கொலை செய்து விட்டி தப்பிய வேலாயுதத்தை போலீசார் தேடி வருகின்றனர்.