திருமலை: ஆந்திர மாநிலம், சித்தூர் மாவட்டம், மதனப்பள்ளி மண்டலம் கே.வி.பள்ளியை சேர்ந்தவர் விவசாயி நாகராஜ், கொரோனா ஊரடங்கால் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டு டிராக்டருக்கு வாடகை செலுத்த முடியாமல் தனது 2 மகள்களை வைத்து ஏர் உழுதார். இந்த வீடியோ காட்சிகள் சமூக வலைதளங்கள் மற்றும் ஊடகங்களில் வெளியானது. இது குறித்து பாலிவுட் நடிகர் சோனுசூட் தனது டிவிட்டரில், ‘இந்த விவசாய குடும்பத்திற்கு டிராக்டர் தான் தேவை. ஆகவே, அதனை நான் வாங்கி தருகிறேன். பெண் பிள்ளைகள் கல்வியில் கவனம் செலுத்த வேண்டும்’ என கூறியுள்ளார். மேலும், நாகராஜை போனில் தொடர்பு கொண்டு பேசினார்.