×

வாலிபரை வெட்டிய 3 நண்பர்கள் கைது

ஆவடி: ஆவடி அடுத்த கோயில்பதாகை, அசோக் நகர், முல்லை தெருவை சேர்ந்தவர் அஜய் (19). கூலித்தொழிலாளி. இவரது நண்பர்கள் மிட்டினமல்லி, எம்.சி.ராஜா தெருவை சேர்ந்த மதன் (25), அதே பகுதியை சேர்ந்த விஜய் (25), எண்ணூர், ஏ.எஸ்.நகர் 11வது தெரு சேர்ந்த ராஜேஷ் (29) ஆகியோர் நேற்று முன்தினம் இரவு மிட்டனமல்லி, பள்ளிக்கூடம் அருகே கஞ்சா புகைத்தனர். அப்போது அஜய்க்கு, நண்பர்களுக்கும் இடையில் வாக்குவாதம் ஏற்பட்டது. பின்னர், மதனுக்கும், அஜய்க்கும் இடையே கைகலப்பானது. அப்போது, மதன் மறைத்து வைத்திருந்த கத்தியை எடுத்து அஜயை சரமாரியாக வெட்டினார்.  

இதில், அவருக்கு தலையில் பலத்த காயம் ஏற்பட்டது. மேலும், மோதிரவிரல், சுண்டுவிரல் ஆகியவை துண்டானது. இதனை பார்த்த மதன் தனது நண்பர்களான விஜய், ராஜேஷ் ஆகியோருடன் அங்கிருந்து தப்பி ஓடி தலைமறைவானார். படுகாயமடைந்த அஜயை உறவினர்கள் மீட்டு சிகிச்சைக்காக கீழ்ப்பாக்கம் மருத்துவமனையில் சேர்த்தனர். புகாரின் பேரில் முத்தாப்புதுபேட்டை போலீசார் வழக்கு பதிவு செய்து மதன், விஜய், ராஜேஷ் மூவரையும் நேற்று மாலை கைது செய்தனர்.

Tags : friends , Valiparai, hacked, 3 friends, arrested
× RELATED துபாயில் 2 ஆண்டுகளில் பெய்ய வேண்டிய...