×

மின்னல் தாக்கி ஒருவர் பலி

திருப்போரூர்:திருப்போரூர் அடுத்த அனுமந்தபுரம் கிராமத்தைச் சேர்ந்தவர் தேவேந்திரன் (40). திருமணமாகி மனைவி, 2 குழந்தைகள் உள்ளனர். இவர் ஏரி, குளம், குட்டைகளில் மீன் பிடித்து விற்பனை செய்யும் தொழில் செய்து வந்தார். நேற்று முன்தினம் மாலை சிறுங்குன்றம் ஏரியில் சிறிய வலை மூலம் மீன் பிடித்துக் கொண்டிருந்தார். அப்போது பலத்த இடி, மின்னலுடன் கன மழை பெய்யத் தொடங்கியது. தேவேந்திரன் ஏரிக்கரையில் இருந்த மரத்தின் அடியில் ஒதுங்கி நின்றார். அப்போது மின்னல் தாக்கியதில் தேவேந்திரன் உயிரிழந்தார். தகவல் அறிந்ததும் திருப்போரூர் போலீசார் அங்கு சென்று சடலத்தைக் செங்கல்பட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.


Tags : Lightning strikes , Lightning strikes, kills one
× RELATED சென்னை தாம்பரம் அருகே இருவேறு...