×

பெரியகுளம் மருத்துவமனையில் போராட்டம் காஞ்சுபோன சப்பாத்தி வேணாம்... கொரோனா நோயாளிகள் உண்ணாவிரதம்

பெரியகுளம்: பெரியகுளம் அரசு மருத்துவமனையில் தரமற்ற உணவு வழங்குவதாக கூறி கொரோனா நோயாளிகள் நேற்று முன்தினம் இரவு உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டனர். தேனி மாவட்டம், பெரியகுளத்தில் மாவட்ட அரசு தலைமை மருத்துவமனை உள்ளது. இங்கு 120 படுக்கைகளுடன் கொரோனா வார்டு அமைக்கப்பட்டு, 2 மாதமாக தொற்றால் பாதிக்கப்பட்டோருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. கொரோனாவுக்கு மருந்து கண்டுபிடிக்காததால், சத்தான உணவுகள் வழங்கியும், கபசுர குடிநீர் உள்ளிட்ட சித்த மருந்துகளை கொடுத்தும் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரித்து குணப்படுத்தி வருகின்றனர்.

இந்நிலையில், மருத்துவமனையில் கொரோனா நோயாளிகளுக்கு தரமற்ற உணவு வழங்குவதாக புகார் எழுந்துள்ளது. நேற்று முன்தினம் இரவு வழங்கிய சப்பாத்தி காய்ந்து போய் இருந்ததால், அனைவரும் சாப்பிடாமல் குப்பைக் கூடையில் போட்டுள்ளனர். பின்னர், இரவு முதல் உண்ணாவிரத போராட்டம் நடத்தினர். நேற்று காலை மருத்துவமனை நிர்வாகம் அவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தி சமாதானம் செய்தது. மாவட்ட நிர்வாகம் தலையிட்டு, கொரோனா நோயாளிகளுக்கு சத்தான உணவு வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.

Tags : hospital ,Periyakulam ,Corona , Periyakulam Hospital, protest, canned chapati, corona patients, fasting
× RELATED கோடை வெப்பத்தை தணிக்க கும்பக்கரையில் குவியும் பயணிகள்