×

பூந்தமல்லி அருகே பயங்கரம் விஷம் கொடுத்தும் சாகாததால் கழுத்தை நெரித்து கணவன் கொலை: கள்ளக்காதலனுடன் மனைவி கைது

சென்னை: பூந்தமல்லி அடுத்த காட்டுப்பாக்கம், ஓம்சக்தி நகர் பகுதியை சேர்ந்தவர் தரணிதரன் (39), கார் டிரைவர். இவரது மனைவி பவானி (31). இவர்களுக்கு திருமணமாகி இரண்டு குழந்தைகள் உள்ளனர். தரணிதரன் கடந்த 22ம் தேதி கடன் தொல்லையால் துப்பட்டாவால் தனக்கு தானே கழுத்தை இறுக்கிக்கொண்டு தற்கொலை செய்து கொண்டதாக அவரது மனைவி பூந்தமல்லி போலீசாருக்கு தகவல் தெரிவித்தார். சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் தரணிதரன் உடலை கைப்பற்றி, பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்  இந்நிலையில் பிரேத பரிசோதனை அறிக்கையில் தரணிதரன் கழுத்து இறுக்கப்பட்டு உயிரிழந்தது தெரியவந்தது.

இதையடுத்து அவரது மனைவி பவானியிடம் போலீசார் விசாரணை செய்தபோது முன்னுக்குப்பின் முரணாக பேசியுள்ளார். மேலும் அவரது செல்போன் அழைப்புகளை போலீசார் சோதனை செய்தபோது, ஒரு நபர் அடிக்கடி பேசி வந்ததும், தரணிதரன் இறப்பதற்கு முன்பு அந்த நபர் வீட்டிற்கு வந்து சென்றதும் தெரியவந்தது. விசாரணையில் பூந்தமல்லி, திருமால் நகரை சேர்ந்த தினேஷ் (31), டிரைவர் என்பதும், இவர் திருமணமாகி மனைவியை பிரிந்து வாழ்ந்து வருகிறார். தரணிதரனும் தினேஷும் ஒன்றாக மது அருந்துவது வழக்கம். இதனால் தரணிதரன் வீட்டிற்கு அடிக்கடி வரும்போது தினேசுக்கும், பவானிக்குமிடையே கள்ளக்காதல் மலர்ந்துள்ளது. தினேஷும் பவானியும் தனிமையில் சந்தித்து உல்லாசமாக இருந்துள்ளனர்.

இவர்களது கள்ளக்காதல் விவகாரம் தரணிதரனுக்கு தெரியவந்ததும் இருவரையும் கண்டித்துள்ளார். கள்ளக்காதலுக்கு தரணிதரன் இடையூறாக இருப்பதால் அவரை தீர்த்துக்கட்ட பவானியும் தினேஷும்  முடிவு செய்தனர். இந்நிலையில், இவர்களது திட்டப்படி, கடந்த 21ம் தேதி பூச்சி மருந்துக்கடையில் இருந்து பூச்சி மருந்தை வாங்கி வந்து உணவில் கலந்து கொடுத்து விடும்படி பவானியிடம் தினேஷ் கூறியுள்ளார்.  அதன்படி இரவு போதையில் வந்த தரணிதரனுக்கு மனைவி பவானி, உணவில் பூச்சி மருந்தை கலந்து கொடுத்துள்ளார்.

அதனை சாப்பிட்டு விட்டு தூங்கிய தரணிதரன் 22ம் தேதி காலையில் வழக்கம் போல் எழுந்து வாந்தி மட்டும் எடுத்து விட்டு, காபி குடித்துவிட்டு தன்னை 10 மணிக்கு எழுப்பி விடுமாறு கூறிவிட்டு மீண்டும் தூங்க சென்றுள்ளார். பூச்சி மருந்து கொடுத்தும் கணவன் சாகாததால் ஆத்திரமடைந்த பவானி, கள்ளக்காதலன் தினேஷுக்கு தகவல் தெரிவித்துள்ளார். தினேஷ் வீட்டிற்கு வருவதற்குள், தனது 2 மகள்களையும் மாடியில் உள்ள அவரது தாத்தா வீட்டிற்கு அனுப்பி வைத்து விட்டார்.
தினேஷ் வீட்டிற்கு வந்ததும் தூங்கிக் கொண்டிருந்த தரணிதரனின் கழுத்தை துப்பட்டாவால் இறுக்கி கொலை செய்துள்ளார். பின்னர் அவரே தற்கொலை செய்து கொண்டது போல் துப்பட்டாவின் இரண்டு பகுதிகளையும் தரணிதரன் கையில் சுற்றி விட்டு தினேஷ் அங்கிருந்து சென்று விட்டது தெரிய வந்துள்ளது. இதனை மறைப்பதற்காக கடன் தொல்லையால் தனது கணவர் தனக்கு தானே கழுத்தை இறுக்கி தற்கொலை செய்துகொண்டதாக பவானி நாடகமாடியது தெரியவந்தது இருவரையும் போலீசார் கைது செய்து தீவிரமாக விசாரணை செய்து வருகின்றனர்.

Tags : death ,Poonamallee ,lover , Poonamallee, terror, poison, strangulation, husband murder, wife arrested
× RELATED இன்சுலின், மருத்துவ ஆலோசனை மறுப்பு...