×

தொடர்ந்து 6-வது நாளாக எல்லையில் பாகிஸ்தான் அத்துமீறல்: போர் நிறுத்த ஒப்பந்தத்தை மீறி நடந்த தாக்குதலுக்கு இந்தியா தக்க பதிலடி..!!

ஸ்ரீநகர்: இந்தியா மற்றும் பாகிஸ்தான் நாடுகளுக்கு இடையே போர்நிறுத்த ஒப்பந்தம் அமலில் உள்ளது.  இதனால் எல்லை பகுதியில் மோதல் போக்கு தவிர்க்கப்பட்டு உள்ளது. ஏனிலும், எல்லையில் போர் நிறுத்த ஒப்பந்தத்தை மீறி தாக்குதல் நடத்துவதை பாகிஸ்தான் ராணுவம் வாடிக்கையாகக் கொண்டுள்ளது. பாகிஸ்தான் ராணுவத்தின் அத்துமீறிய தாக்குதலுக்கு இந்திய ராணுவமும் தக்க பதிலடி கொடுத்து வருகிறது. பாகிஸ்தான் ராணுவத்தின் அத்துமீறிய தாக்குதலை,  இந்தியா பலமுறை, அந்நாட்டு தூதரக அதிகாரிகளுக்கு சம்மன் கொடுத்து கண்டித்த போதிலும் எந்த பலனும் கிடைப்பதில்லை.

இந்த நிலையில், ஜம்மு காஷ்மீரின் பூஞ்ச் மாவட்டத்தில் உள்ள பாலகோட் செக்டாரில் பாகிஸ்தான் ராணுவம் அத்துமீறி தாக்குதலில் ஈடுபட்டுள்ளது. மோர்டார்கள் மூலம் சிறிய ரக ஆயுதங்களால் பாகிஸ்தான் தாக்குதல் நடத்தியது. பாகிஸ்தானின் அத்துமீறிய தாக்குதலுக்கு இந்திய ராணுவமும் தக்க பதிலடி கொடுத்து வருகிறது.  

மேலும், பாகிஸ்தான் தொடர்ந்து 6-வது நாளாக எல்லையில் அத்துமீறலில் ஈடுபட்டுள்ளது. கடந்த மாதம் ஜூன் 10ம் தேதி நள்ளிரவில் ஜம்மு காஷ்மீரின் எல்லைக் கட்டுப்பாட்டுக் கோடு பகுதியில் பல்வேறு ராணுவ நிலைகள் மற்றும் குடியிருப்பு பகுதிகளை குறிவைத்து பாகிஸ்தான் ராணுவம் தாக்குதல் நடத்தியது. குறிப்பாக மஞ்சகோட் செக்டார், கெரி செக்டார், பாலக்கோட் செக்டார், கரோல் மைத்ரன் செக்டார்களில் சிறிய ரக மற்றும் கனரக ஆயதங்கள், மோர்ட்டார் ரக குண்டுகள் மூலம்  தாக்குதல் நடத்தப்பட்டது. பாகிஸ்தானின் அத்துமீறலுக்கு இந்திய ராணுவம் தரப்பில் பதில் தாக்குதல் நடத்தப்பட்டது.

இதில், இந்திய ராணுவ வீரர் ஒருவர் உயிரிழந்ததாக ராணுவ வட்டார தகவல்கள் தெரிவிக்கின்றன. மஞ்சகோட் செக்டாரில் நடந்த தாக்குதலில் ஒருவருக்கு காயம் ஏற்பட்டது. அவர் உடனடியாக மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். அவரது தோள்பட்டையில் பாய்ந்த சிறிய தோட்டா அகற்றப்பட்டது.  அவரது உடல்நிலை சீராக இருப்பதாக டாக்டர் தெரிவித்துள்ளார். இந்தியா பலமுறை, அந்நாட்டு தூதரக அதிகாரிகளுக்கு சம்மன் கொடுத்து கண்டித்த போதிலும் எந்த பலனும் கிடைப்பதில்லை. இதற்கு இந்திய ராணுவம் தக்க பதிலடி கொடுத்து வருகிறது.

Tags : border ,India ,Pakistan ,attack , Pakistan, encroachment, India, retaliation
× RELATED எல்லை தாண்டி ஓடிய தீவிரவாதிகளை கொல்ல...