×

சமூக நீதி போருக்கு ஆதரவு தர வேண்டும்...!! தேசிய தலைவர்கள், மாநில முதல்வர்களுக்கு மு.க. ஸ்டாலின் கடிதம்

சென்னை: திமுக நடத்தும் சமூக நீதிக்கான போருக்கு ஆதரவு தரக்கோரி சோனியா காந்தி, சீதாராம் யெச்சூரி உள்ளிட்ட கட்சி தலைவர்களுக்கு மு.க.ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளார். இடஒதுக்கீடு தொடர்பான அரசியல் சட்டத்தின் அடிப்படை அம்சங்களை பாதுகாத்திட குரல் கொடுக்க வேண்டும் என கடிதத்தில் வலியுறுத்தியுள்ளார். இடஒதுக்கீடு தொடர்பான அரசியல் சட்டத்தின் அடிப்படை அம்சங்களை பாதுகாத்திட குரல் கொடுக்க வேண்டும் என்று தேசிய தலைவர்கள் மற்றும் மாநில முதல்வர்களுக்கு முக ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளார்.

திமுக தலைவர் மு.க. ஸ்டாலின் காங்கிரஸ் கட்சி தலைவர் சோனியா காந்தி, கம்யூனிஸ்டு தலைவர் சீதாராம் யெச்சூரி, லாலு பிரசாத் யாதவ், மகாராஷ்டிரா மாநில முதல்வர் உத்தவ் தாக்கரே, மேற்கு வங்காளம் முதல்வர் மம்தா பானர்ஜி, ஆந்திர முதல்வர் ஜெகன்மோகன் ரெட்டி உள்ளிட்ட தேசிய தலைவர்கள் மற்றும் மாநில முதல்வர்களுக்கு இன்று கடிதம் ஒன்று எழுத்தியுள்ளார். அதில் ‘‘திமுக நடத்தும் சமூக நீதிக்கான போருக்கு ஆதரவு தர வேண்டும். பிற்படுத்தப்பட்ட பட்டியல் இன சமூகங்களுக்கு சமத்துவத்தை உறுதி செய்ய அவர்கள் சமவாய்ப்பு பெற்றிட வேண்டும்.

இட ஒதுக்கீடு தொடர்பான அரசியல் சட்டத்தின் அடிப்படை அம்சங்களை பாதுகாத்திட குரல் கொடுத்திட வேண்டும்’’ என்று தெரிவித்துள்ளார். இட ஒதுக்கீடு என்பது அடிப்படை உரிமை இல்லை என்று உச்ச நீதிமன்றமே தெரிவிக்கும் அளவுக்கு இட ஒதுக்கீட்டீன் முக்கியத்துவம் மறக்கடிக்கப்பட்டிருக்கும் நிலையில் தமிழகத்தின் எதிர்க்கட்சி இதனை தேசியப் பிரச்சினையாக கையிலேடுத்திருப்பது கவனிக்கத்தக்கது.


Tags : war ,Stalin ,leaders ,state , Social justice war, support, national leaders, heads of state, e.g. Stalin
× RELATED “நீதியின் பக்கம் நின்று, I.N.D.I.A....