சென்னை: திமுக நடத்தும் சமூக நீதிக்கான போருக்கு ஆதரவு தரக்கோரி சோனியா காந்தி, சீதாராம் யெச்சூரி உள்ளிட்ட கட்சி தலைவர்களுக்கு மு.க.ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளார். இடஒதுக்கீடு தொடர்பான அரசியல் சட்டத்தின் அடிப்படை அம்சங்களை பாதுகாத்திட குரல் கொடுக்க வேண்டும் என கடிதத்தில் வலியுறுத்தியுள்ளார்.