×

விருத்தாசலம் அரசு மருத்துவமனையில் 8 செவிலியர்களுக்கு விதிகளை மீறி பணி ஒதுக்கீடு

விருத்தாசலம்: விருத்தாசலம் அரசு மருத்துவமனையில் 8 செவிலியர்களுக்கு விதிகளை மீறி பணி ஒதுக்கீடு செய்யப்படுவதாக தகவல் வெளியாகியுள்ளது. மகப்பேறு, புறநோயாளிகள் பிரிவு ஆகியவற்றில் பணியமர்த்தப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. கர்ப்பிணி உள்ளிட்ட 9 பிரிவினருக்கு தொற்று பாதிப்பு உள்ள பகுதிகளிலிருந்து விலக்கு அளித்து ஏப்ரல் 20-ம் தேதி தமிழக அரசு உத்தரவிட்டிருந்தது. கொரோனா பாதிப்புக்கு வாய்ப்பு உள்ள வார்டுகளில் கர்ப்பிணி செவிலியர்களுக்கு பணி வழங்கப்படுகிறது. அரசின் உத்தரவை மீறும் வகையில் செயல்படுவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.


Tags : nurses ,Vriddhachalam Government Hospital , Vriddhachalam Government Hospital, 8 nurses, assignment
× RELATED தமிழகத்தில் தற்காலிகமாக பணியாற்றி...