சென்னை: முழு ஊரடங்கில் கடந்த வாரங்களை விட இன்று வாகனங்களில் செல்வது குறைந்துள்ளது என சென்னை சென்டரலில் பெருநகர காவல் ஆணையர் மகேஷ்குமார் பேட்டியளித்தார். 193 சோதனைச்சாவடிகள் அமைக்கப்பட்டு கண்காணிக்கப்பட்டு வருகிறது எனவும் கூறினார். சைபர் கிரைம் குற்றங்களை தடுக்க விரைவில் புதிய திட்டம் அமல்படுத்தப்படும் என கூறினார்.