சென்னை: நடிகை வனிதா புகாரில் கைதான சூர்யா தேவிக்கும், கைது செய்த பெண் ஆய்வாளருக்கும் கொரோனா உறுதியானது. தொற்று உறுதி செய்யப்பட்ட சூர்யாதேவி தலைமறைவாகி விட்டதாக காவல்துறை தரப்பில் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. நடிகை வனிதாவை பற்றி அவதூறு பரப்புவதும், மிரட்டல் விடுப்பதாகவும் கொடுக்கப்பட்ட புகாரின் அடிப்படையில் வடபழனி அனைத்து மகளிர் காவல்நிலைய போலீசார் சூர்யா தேவியை கைது செய்தனர். சூர்யாதேவி கைதானபோது நடிகை வனிதா மற்றும் பல காவலர்கள் காவல்நிலையத்தில் உடனிருந்ததாக தகவல் கூறப்படுகிறது.