×

சாத்தான்குளம் தந்தை-மகன் கொலை வழக்கை விசாரித்து வரும் மேலும் ஒரு சிபிஐ அதிகாரிக்கு கொரோனா தொற்று உறுதி!

தூத்துக்குடி:  சாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கை விசாரித்து வரும் மேலும் ஒரு சிபிஐ அதிகாரிக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளத்தில் கடந்த ஜூன் 19 ல் விசாரணைக்காக அழைத்து செல்லப்பட்ட வியாபாரி ஜெயராஜ் மற்றும் அவரது மகன் பெனிக்ஸ் ஆகியோர் பெனிக்ஸ் தாக்குதலில் இறந்தனர். இது தொடர்பாக சஸ்பெண்ட் செய்யப்பட்ட இன்ஸ்பெக்டர் ஸ்ரீதர், சிறப்பு எஸ்.ஐ., பால்துரை, எஸ்.ஐ.,க்கள் பாலகிருஷ்ணன், ரகுகணேஷ் என 10 போலீசார் கைது செய்யப்பட்டனர். இந்த வழக்கை சிபிஐ அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த வழக்கில் கைது செய்யப்பட்டு சிறையில் இருக்கும் 10 போலீசாரையும் சி.பி.ஐ. அதிகாரிகள் காவலில் எடுத்து மதுரை ஆத்திக்குளத்தில் உள்ள அலுவலகத்தில் வைத்து விசாரணை நடத்தினர்.

சாத்தான்குளம் அழைத்துச் சென்றும் விசாரித்தனர். இதற்கிடையே காவலில் எடுக்கப்பட்ட போலீசாருக்கும், அவர்களிடம் விசாரணை நடத்திய சி.பி.ஐ. அதிகாரிகளுக்கும் கொரோனா பரிசோதனை செய்யப்பட்டதில், சி.பி.ஐ. விசாரணை குழுவில் உள்ள சப்-இன்ஸ்பெக்டர் சச்சின் உள்பட 2 பேருக்கு கொரோனா தொற்று இருந்தது தெரியவந்தது. அதை தொடர்ந்து இருவரும் ஏற்கனவே மதுரை ரயில்வே மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். இதையடுத்து, சாத்தான்குளம் வழக்கில் கைதான போலீசாருக்கும், சி.பி.ஐ. அதிகாரிகள் மற்ற 6 பேருக்கும் மீண்டும் கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. இதன் முடிவுகள் நேற்று காலை வெளிவந்தன. அதில் சி.பி.ஐ. குழுவில் இடம்பெற்றிருந்த பவன்குமார்திவேதி, அஜய்குமார் ஆகியோருக்கு கொரோனா தொற்று இருப்பது தெரியவந்தது.

பின்னர் அவர்களும் மதுரை ரயில்வே மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். இதேபோல் சாத்தான்குளம் வழக்கில் 9வது குற்றவாளியாக சேர்க்கப்பட்டுள்ள சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் பால்துரைக்கும் கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டது. அதை தொடர்ந்து அவரை சிறை நிர்வாகம் தனிமைப்படுத்தி, மதுரை பெரிய மருத்துவமனைக்கு அழைத்துச் சென்று அனுமதித்தனர். இந்நிலையில்  சாத்தான்குளம் தந்தை-மகன் வழக்கை விசாரித்து வரும் மேலும் ஒரு சிபிஐ அதிகாரிக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது. ஏற்கனவே 4 சிபிஐ அதிகாரிகளுக்கு கொரோனா ஏற்பட்ட நிலையில் மேலும் ஒருவருக்கு பாதிப்பு இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. இதையடுத்து, கொரோனாவால் பாதிக்கப்பட்ட அதிகாரிகள் மதுரை ரயில்வே மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

Tags : officer ,Sathankulam ,CBI ,father-son , Sathankulam, father-son murder, CBI officer, Corona
× RELATED மக்களவை தேர்தலில் வாக்களிக்க...