சென்னை: திரைப்பட இயக்குனர் வேலு பிரபாகரன், இந்து மதம், தமிழ் கடவுள் முருகன் குறித்தும், இந்துக்கள் மனம் புண்படும் வகையில் சமூக வலை தளங்களில் அவதூறாக பேசி வருகிறார். அவரை கைது செய்ய வேண்டும் என்ற கோரிக்கையை வலியுறுத்தி பா.ஜவினர் 20க்கும் மேற்பட்டோர் மதுரவாயல் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தனர். இதுகுறித்து போலீசார் நடவடிக்கை எடுப்பதாக கூறினர்.