×

ஏரியில் மூழ்கி மாணவன் சாவு

திருத்தணி: திருவாலங்காடு ஒன்றியம், அரிச்சந்திராபுரம் கிராமத்தைச் சேர்ந்தவர் ரியாஸ். இவரது மகன் அசரத் (8). இவன் அதே பகுதியில் உள்ள பள்ளியில் 3ம் வகுப்பு படித்து வந்தான். இந்நிலையில், நேற்று மதியம் அசரத் தனது நண்பர்கள் ஐந்து பேருடன் பெரியகளாக்காட்டூர் ஏரியில் குளிக்க சென்றான். ஏரியில் குளித்துக் கொண்டிருந்தபோது அசரத் ஆழமான பகுதிக்கு சென்று தண்ணீரில் முழ்கி பலியானான். இதனை கண்டு சக நண்பர்கள் அதிர்ச்சியடைந்து அசரத்தின் பெற்றோருக்கு தகவல் தெரிவித்தனர். மேலும், இதுகுறித்து தகவல் அறிந்து திருவாலங்காடு போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று சிறுவனை ஏரியில் இருந்து சடலமாக மீட்டனர். புகாரின் பேரில் விசாரித்து வருகின்றனர்.



Tags : Student ,lake , Student , lake
× RELATED கோவை கல்லூரி மாணவர்கள் உருவாக்கிய...