×

திருக்கழுக்குன்றம் அருகே புளியமரத்தில் கார் மோதி 2 வாலிபர்கள் பலி: நண்பர் படுகாயம்

திருக்கழுக்குன்றம்: திருக்கழுக்குன்றம் அடுத்த பொன்பதிர்கூடம் கிராமத்தைச் சேர்ந்தவர் கண்ணன் (34). கார் டிரைவர். இவரது நண்பர் செங்கல்பட்டு அடுத்த ஆலப்பாக்கத்தை சேர்ந்த அமல்ராஜ் (35). இந்நிலையில், நேற்று இரவு கண்ணன், நண்யர் அமல்ராஜ் உள்பட 2 பேருடன், திருக்கழுக்குன்றத்தில் இருந்து செங்கல்பட்டு நோக்கி காரில் புறப்பட்டார். ஆசிரியர் நகர் பை பாஸ் சாலை வளைவில்  திரும்புவதற்கு பதில் நேராக சென்று சாலையோர புளியமரத்தில் கார் மோதியது. இதில், உடல் நசுங்கி சம்பவ இடத்திலேயே கண்ணன், அமல்ராஜ் இறந்தனர். உடன் வந்த அவர்களது நண்பர் படுகாயமடைந்தார்.

தகவலறிந்து, திருக்கழுக்குன்றம் போலீசார், சம்பவ இடத்துக்கு சென்று சடலங்களை பிரேத பரிசோதனைக்காகவும், படுகாயமடைந்தவரை சிகிச்சைக்காகவும் செங்கல்பட்டு அரசு மருத்துவமனைக்கு அனுப்பினர். மேலும் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரிக்கின்றனர்.

Tags : car accident ,teenagers ,Thirukkalukkunram , Thirukkalukkunram, Puliyamaram, 2 teenagers killed, friend
× RELATED திருக்கழுக்குன்றம் வேதகிரீஸ்வரர்...