×

சொத்துக்காக மாமனார், கணவரை கொன்றதுடன் மாமியாரை மருமகளே கடத்திய வழக்கில் முக்கிய குற்றவாளி அதிரடி கைது

சென்னை: சென்னை அயனாவரத்தில் சொத்துக்காக மாமனார், கணவன், மைத்துனரை கொலை ெசய்து மாமியாரை  மருமகளே கடத்திய சம்பவத்தில் தலைமறைவாக இருந்த முக்கிய குற்றவாளியை போலீசார் கைது செய்தனர். தாம்பரம் அடுத்த படப்பையை சேர்ந்த சுப்புராயன்- பத்மினி தம்பதியரின் மகன்கள் செந்தில், ராஜ்குமார். சொத்து தகராறில் கடந்த 2014ம் ஆண்டு தமது சகோதரர் ராஜ்குமாரை, செந்தில் கொலை செய்தார். அதன் பிறகு சிறைக்கு சென்ற செந்தில் சில மாதம் கழித்து தலைமறைவானார். அதன் பிறகு செந்திலை பற்றிய எந்த தகவலும் இல்லை. இதையடுத்து செந்திலின் மனைவி மேனகா தமது தோழியின் வீட்டில் தங்கினார். இந்நிலையில் 2018ம் ஆண்டு தோழியின் கணவரான ராஜேஷ் கண்ணாவை ஏவி,  மாமனார் சுப்புராயனை மேனகா கொலை செய்துள்ளார்.  

இதையடுத்து  மாமியார் பத்மினி வசம் இருந்த பல கோடி ரூபாய் மதிப்பிலான சொத்துக்களை கேட்டு  மேனகா மிரட்டி வந்தார். இதனால் அச்சம் அடைந்த பத்மினி கடந்த ஆண்டு நவம்பர் மாதம்   அயனாவரத்தில் உள்ள உறவினர் வீட்டுக்கு வந்தார். அவரை பின்தொடர்ந்த மேனகா, கூட்டாளிகளுடன் சென்று துப்பாக்கியை காட்டி மிரட்டி பத்மினியை காரில் கடத்தி சென்றார். இந்த சம்பவம் அங்கிருந்த சிசிடிவியில் பதிவானது. இது தொடர்பாக மேனகா, ஜேம்ஸ், பாலமுருகன், கமலா, ரோசி, தர்மலிங்கம் ஆகியோரை அயனாவரம் போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர் கொலை வழக்கை போல், கடத்தல்  வழக்கிலும் மூளையாக செயல்பட்ட ராஜேஷ் கண்ணாவை அயனாவரம் போலீசார் தீவிரமாக தேடி வந்தனர். இந்தநிலையில்  கள்ளக்குறிச்சியில் பதுங்கியிருந்த ராஜேஷ் கண்ணாவை 7 மாதங்களுக்கு பின் அயனாவரம் சட்டம் ஒழுங்கு ஆய்வாளர் நட்ராஜ் கொண்ட தனிப்படை  போலீசார் நேற்று முன் தினம் கைது செய்தனர்.   

அவரிடம் நடத்திய விசாரணையில் பல திடுக்கிடும் தகவல்கள் தெரியவந்தது. தம்பி ராஜ்குமாரை கொலை செய்த அண்ணன் செந்தில் வெளியே வந்த பிறகு செந்திலுக்கும் ராஜேஷ்கண்ணாவுக்கும் இடையே மோதல் ஏற்பட்டுள்ளது. செந்தில் மனைவி மேனகாவை ராஜேஷ்கண்ணா தனது கட்டுப்பாட்டில் வைத்திருந்தார். இதனால் ஆத்திரமடைந்த செந்தில், ராஜேஷ் கண்ணாவுடன் தகராறில் ஈடுபட்டுள்ளார். மேலும் செந்திலின் மாமனாரான திருவள்ளூர் மாவட்டத்தை  சேர்ந்த அருண் என்பவரிடம் முறையிட்டுள்ளார். இதனால் அருணுக்கும் செந்திலுக்கும்  இடையே தகராறு ஏற்பட்டுள்ளது.  இதனையடுத்து மேனகா, மேனகாவின் தந்தை அருண், ராஜேஷ்கண்ணா மூவரும் சேர்ந்து செந்திலை தீர்த்துக்கட்ட  முடிவு செய்ததாகவும் அவரை செஞ்சிக்கு  அழைத்து சென்று துண்டு துண்டாக வெட்டி ஒரு இடத்தில் புதைத்ததாகவும்  ராஜேஷ்கண்ணா தனது வாக்குமூலத்தில் கூறியுள்ளார்.  

இதுவரை இந்த கொலை சம்பந்தமாக எந்த வழக்கும் பதிவு செய்யவில்லை. செந்தில் காணவில்லை என மேனகா ஒரே ஒருமுறை  புகார்  மட்டும் அளித்துள்ளார். மற்றபடி அதற்குப்பின் எந்த தகவலும் இல்லை.   செந்தில் மறைவிற்குப்பின் கேட்பதற்கு யாரும் இல்லை என்பதால் மாமியார்  பத்மினியிடமிருந்து சொத்துக்களை அபகரிக்க  அயனாவரத்தில் அந்தக் கடத்தல் சம்பவம் நடந்துள்ளது. ஆனால் சிசிடிவியில் பதிவான காட்சிகள் மூலம் குற்றவாளிகள் அப்போது மாட்டிக்கொண்டனர். முக்கிய குற்றவாளியான ராஜேஷ்கண்ணா மட்டும் கடந்த 7 மாதமாக  தலைமறைவாக இருந்துள்ளார். தற்போது போலீசார் கைது ெசய்துள்ளனர்.

அயனாவரம் காவல் நிலையத்தில் அவர் மீது கடத்தல் வழக்கில் தலைமறைவாக இருந்த வழக்கு மட்டும்  பதிவு செய்து அவரை சிறைக்கு அனுப்பி உள்ளனர்.   செந்தில் கொலை வழக்கை மணிமங்கலம் போலீசார் விசாரிப்பார்களா அல்லது செஞ்சி  போலீசார் விசாரிப்பார்களா என தெரியவில்லை. சொத்துக்காக பத்மினி தனது 2 மகன்கள் மற்றும் கணவனை இழந்து தற்பொழுது கொள்ளை கும்பலிடம் இருந்து தனது உயிரை பாதுகாக்க ஓடிக் கொண்டிருக்கிறார்.

உரிய விசாரணை  செய்யாத போலீசார்
தம்பியை கொலை செய்துவிட்டு வெளியே வந்த செந்தில் காணாமல் போன பிறகு பலமுறை செந்திலின் தாயார் மணிமங்கலம் காவல் நிலையத்திற்கு சென்று கூறி உள்ளார் ஆனால் அங்கிருந்த போலீசார் அவனே ஒரு ரவுடி பையன் அவனைத்தேடி வருகிறாயா என்று விரட்டி விட்டுள்ளனர். அப்பொழுதே போலீசார் உரிய விசாரணை நடத்தி இருந்தால்  பத்மினியின் கணவர் சுப்புராயன் கொலையுண்டு இருக்கமாட்டார் என கூறப்படுகிறது.செந்தில் காணாமல் போன வழக்கையும் ராஜ்குமார் கொலை வழக்கிலும் சுப்புராயன் கொலை வழக்கிலும் போலீசார் உரிய முறையில் விசாரணை செய்யவில்லை. இந்த கொலைகளுக்கு எல்லாம் மூளையாக செயல்பட்ட மேனகா, ராஜேஷ்கண்ணா தொடர்ந்து தப்பித்துக் கொண்டே வந்து உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

7 மாதமாக கண்காணிப்பு
கடந்த ஏழு மாதமாக ராஜேஷ்கண்ணா 50க்கும் மேற்பட்ட தொலைபேசி எண்களை பயன்படுத்தி உள்ளார் என்பதும் இதனால் அவரை டிராக் செய்வதில் பலத்த சிரமம் இருந்ததாகவும்  கூறப்படுகிறது. அப்படியிருந்தும் அவர்கள் ஒவ்வொரு முறையும் அவர் பேசிய என்னை வைத்து குறைந்தது 50 பேர்களை கண்காணித்து ஏழு மாதமாக குறிவைத்து அயனாவரம் போலீசார் பிடித்துள்ளனர். முக்கிய குற்றவாளியான ராஜேஷ்கண்ணா மட்டும் கடந்த 7 மாதமாக தலைமறைவாக இருந்துள்ளார். தற்போது அவரை போலீசார் கைது ெசய்துள்ளனர்.



Tags : father-in-law ,daughter-in-law ,mother-in-law , Father-in-law, husband, murder, mother-in-law, daughter-in-law, convict, arrested
× RELATED மாமன்னர் ராஜராஜசோழனின் 1038வது சதய விழா தொடங்கியது..!!