×

சாத்தான்குளம் தந்தை - மகன் கொலை வழக்கில் தனக்கு எந்த தொடர்பும் இல்லை: காவலர் முத்துராஜ்

தூத்துக்குடி: சாத்தான்குளம் தந்தை - மகன் கொலை வழக்கில் தனக்கு எந்த தொடர்பும் இல்லை என்று காவலர் முத்துராஜ் தெரிவித்துள்ளார். மேல் அதிகாரிகளின் வற்புறுத்தலின் பேரில் மனுவில் கையெழுத்திட்டதாக முத்துராஜா தகவல் அளித்துள்ளார். எந்த நேரத்திலும் தந்தை - மகன் இருவரையும் அடிக்கவில்லை, தனக்கு எதுவும் தெரியாது என்று முத்துராஜா தெரிவித்துள்ளார்.

சாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கில், காவல் நிலைய ஆய்வாளர் ஸ்ரீதர் உள்பட 10 பேர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். இந்த வழக்கை சிபிஐ விசாரித்து வரும் நிலையில், அதில் இரண்டு அதிகாரிகளுக்கு கொரோனா தொற்று ஏற்பட்டதை அடுத்து, அவர்கள் மதுரையில் உள்ள ரயில்வே மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

மதுரை மத்தியச் சிறையில் அடைக்கப்பட்டிருந்த காவல் ஆய்வாளர் ஸ்ரீதருக்கு திடீரென உடல்நலக் குறைவு ஏற்பட்டுள்ளது. இதனையடுத்து அவர் உடனடியாக அரசு ராஜாஜி மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார். இதற்கிடையில் வழக்கில் தொடர்புடைய மற்றொரு காவலரான முருகனின் ஜாமின் மனுவை மதுரை மாவட்ட முதன்மை நீதிமன்றம் தள்ளுபடி செய்துள்ளது.



Tags : Sathankulam ,Policeman Muthuraj ,murder ,Thoothukudi , Thoothukudi, Sathankulam, father, son, murder
× RELATED சாத்தான்குளம்- பண்டாரபுரம் சாலையில்...